காரைக்கால்: திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சோமவார விழாவை முன்னிட்டு, 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
திருநள்ளார் தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் சனீஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சிவ ஆலயங்களில் கார்த்திகை மாத சோமவார திங்கள் கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடைபெறும். இதில் திருநள்ளாறு கோவிலில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் 108 சங்காபிஷேகம் நடந்தது. சோமவார நிறைவையொட்டி நேற்று 1008 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக விக்னேஷ்வர பூஜை. புன்னியாகவாஜனம்.கலச பூஜை. மகாபூர்ணாஹீதி.தீபாரதனை நடந்தது. பின் தர்ப்பாரண்யேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மகா தீபாரதனை நடைபெற்றது.இதுபோல் சொர்ண கணபதி.முருகன்.பிரணாம்பிகை. சனீஸ்வரபகவான் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. சங்காபிஷேகத்தில் தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான்.கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.