கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2019 02:12
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் துவங் கியது.கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள், திருப்பதியின் ஏற்றம் கொண்ட சிறப்பு பெற்றதாகும். நேற்று முன்தினம் 26ம் தேதி பகல் பத்து உற்சவம் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நாள்தோறும் மாலை 4:00 மணி முதல் 6:00 மணிக் குள் பெருமாள் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை நடக்கிறது.
வரும் 5ம் தேதி மாலை 5:00 மணிக்கு பெருமாளுக்கு மோகனி அவதாரம் செய்து உற்சவம் நடக்கிறது. 6ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.தொடர்ந்து அன்று முதல் ராபத்து உற்சவம் மாலை 6:45 மணிக்கு மேல் நடத்தப்படுகிறது. ஜனவரி 12ம் தேதி ஆண்டாளுக்கு கூடாரவல்லி உற்சவம், 14ம் தேதி ஆண்டாள் திருக்கல்யாணம், 15ம் தேதி நம்மாழ்வாருக்கு மோட்சமளிக்கும் உற்சவம் நடக்கிறது.