புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2026 10:03
கடலுார்: கடலுார், புதுப்பாளையம் ராஜ கோபால சுவாமி கோவிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு நேற்று காலை பெருமாள், உபய நாச்சியாருக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாரானை நடந்தது. மாலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி கோவில் உள்புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி ராஜா சரவணக்குமார் மற்றும் பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர். இதே போன்று, திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, பஞ்சாங்கம் வாசித்தல், தீபாராதனை நடந்தது.