""உன் கண் கெட்டதாயிருந்தால் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்”. ஒன்றை கெட்ட நோக்கத்துடன் பார்த்தால், அது கெட்டதாகவே தோன்றும். ஏனெனில் ஒருவரின் எண்ணமே இதற்குக் காரணம். ஆணும், பெண்ணும் ஓரிடத்தில் நின்று பேசினால், அதை தவறாக ஏன் கருத வேண்டும்? பொது விஷயங்களை விவாதிக்கலாம், கண்ணியத்துடன் பழகலாம். பயனுள்ள பொழுதுபோக்கில் ஈடுபடலாம் என நினைத்தால், நல்லதே கண்ணுக்கு தெரியும். கீழ்த்தரமான எண்ணமுடன் இருந்தால் மோசமான விஷயம் பேசுவதாக கருதத் தோன்றும். நல்லதையே நினையுங்கள். நல்லதே அமையும்.