பதிவு செய்த நாள்
17
ஜன
2020
10:01
ஆர்.கே.பேட்டை:பாரம்பரியமாக நடத்தப்படும் மலைச்சுற்று திருவிழா, 80ம் ஆண்டாக, இன்று நடைபெற உள்ளது.
ஆர்.கே.பேட்டை அடுத்த, பொதட்டூர்பேட்டை கிராமத்தின் மேற்கில் அமைந்துள்ளது ஆறுமுக சுவாமி மலைக்கோவில்.மலையடிவாரத்தில், முருகர் மற்றும் ஆறுமுக சுவாமி சன்னிதிகளும், மலை உச்சியில் பிள்ளையார் கோவிலும் உள்ளன.காணும் பொங்கல் திருநாளன்று, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மலைக்கோவிலுக்கு தரிசனம் செய்ய வருவது வழக்கம்.
இந்த நிகழ்ச்சியின் போது, நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்க வாய்ப்பு கிடைப்பதால், வெளியூர்களில் வசிப்பவர்களும், காணும் பொங்கல் திருவிழாவிற்காக, சொந்த ஊருக்கு கட்டாயம் வந்து செல்வதும், மலைக்கோவில் வழிபாடு நடத்துவதும், பாரம்பரியமாக நடந்து வருகிறது.கோவில் நிர்வாகம், 80ம் ஆண்டாக இன்று நடைபெறும் மலைச்சுற்று நிகழ்ச்சியை விமரிசையாக கொண்டாட சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.இரவு, 7:00 மணியளவில், அகத்தீஸ்வரர், விநாயகர், ஆறுமுக சுவாமிகளின் பரிவேட்டை உற்சவமும் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.