பதிவு செய்த நாள்
17
ஜன
2020
11:01
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த, பூங்கா நகர், யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், வியாழக்கிழமையான நேற்று, காலை, 10:00 மணியளவில், குரு பகவானுக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவில், சிவ -- விஷ்ணு கோவில்களில், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடந்தது.
மணவாள நகரில் உள்ள மங்களீஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்து வழிபட்டனர்.
சாய்ராம் பல்லக்கில் பவனி திருவள்ளூர்: திருவள்ளூர், பெருமாள் செட்டி தெருவில் உள்ள ஓம் ஆனந்த சாய்ராம் தியானக்கூடத்தில், வியாழக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, நேற்று காலை, மதியம் நடந்தது. மாலையில், ஆனந்த சாய்ராம் பல்லக்கில் பவனி வந்தார்ஒண்டிக்குப்பம், சாய்பாபா கோவிலில், காலை, மதியம், மாலை மற்றும் இரவு என, நான்கு வேளைகளில், ஆரத்தி நடந்தது.இதே போல், தேவி மீனாட்சி நகரில் உள்ள சாய்பாபா கோவிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது.நெய்வேலி கிராமத்தில் உள்ள ராகவேந்திரருக்கு, பஞ்சாமிர்த அபிஷேகமும், மதியம், மஹா மங்கள ஆரத்தியும், இரவு ஸ்வஸ்தி பூஜையும் நடந்தது.