பதிவு செய்த நாள்
24
ஜன
2020
02:01
சென்னை: தேர் திருவிழாக்களின் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் நடந்த தேர் திருவிழாக்களின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில், திருவிழாக்களை எப்படி நடத்துவது என்பது குறித்து, தமிழக அரசு விதிகளை வகுத்து, ௨௦௧௨ல் உத்தரவு பிறப்பித்தது.இந்த விதிகளை முறையாக பின்பற்றாததால், நாமக்கல் மாவட்டத்தில், கோவில் தேர் திருவிழாக்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், கண்டிப்புடன் விதிகளை அமல்படுத்த கோரியும், உயர் நீதிமன்றத்தில், சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார்.மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. தேர் திருவிழாக்களின் போது, உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, பிப்., ௨௩க்கு தள்ளி வைத்தனர்.