பதிவு செய்த நாள்
24
ஜன
2020
02:01
வீரபாண்டி: மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும், கரபுரநாதர் கோவிலில், ஏகாதச ருத்ர பாராயண யாகம் சிறப்பு பூஜை நடந்தது.
நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தீர, பூமி எங்கும் மழை பொழிந்து, மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டி, நேற்று சேலம் அருகே உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம் நடந்தது. காலை கோ பூஜையுடன் 11 கலசம் வைத்து சிவாச்சாரியார்களால், 121 முறை ஏகாதச ருத்ர பாராயணம் செய்யப்பட்டது. 108 முலிகைகளை கொண்டு, மகா ருத்ர சிறப்பு யாகம் செய்து, அதில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களின் புனிதநீரால், பெரியநாயகி அம்மன், கரபுரநாதருக்கு அபி?ஷகம் செய்யப்பட்டது. மதியம், சிறப்பு உபசார பூஜையுடன் ருத்ர பாராயணம் நிறைவடைந்தது. இதில், கலந்து கொள்பவர்களுக்கு சகல சவுபாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. இதற்காக நெய்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவரி, அரியானூர், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, பாலசுப்பிரமண்ய ஈசான சிவம் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மற்றும் கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.