திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் ரதசப்தமியை முன்னிட்டு தேகளீச பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா நடந்தது.
ரத சப்தமியை முன்னிட்டு காலை 5:00 மணிக்கு மூலவர் விஸ்வரூப தரிசனம், 6:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை, 7:00 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது.தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு ஜீயர் மடத்தில், ஜீயர்மட ஸ்தாபகரும் முதல் பட்ட ஜீயருமான லட்சுமணார்ய எம்பெருமானார் சுவாமிகளின் 567 வது திருநட்சத்திர உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து 5 நாட்கள் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச் சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.