இங்கிலாந்திலுள்ள ஒரு கிராமத்தில் புதிய தேவாலயம் கட்டப்பட்டது. அதின் முன்சுவரில் ஆட்டுக்குட்டியின் படம் வரையப்பட்டிருந்தது. அதைப் பார்த்த மக்கள், ‘‘ஆட்டுக்குட்டியை மட்டும் ஏன் தனியாக வரைந்துள்ளனர்?’’ எனக் கேட்டனர். கட்டுமானப்பணியில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவர், ‘‘நான் உயரமான இடத்தில் அமர்ந்து பணியாற்றிய போது சாரத்தில் கட்டிய கயிறு அறுந்தது. அதனால் நழுவி கீழ் நோக்கி விழுந்த போது இறப்பது உறுதி என மனம் துடித்தேன். ஆனால் கீழே ஆட்டுக்குட்டி ஒன்று நின்றதால் அதன் மீது விழுந்து உயிர் பிழைத்தேன். அந்த ஆட்டுக்குட்டி என் உடல் பாரம் தாங்காமல் அங்கேயே துடிதுடித்து இறந்தது. என் உயிர் காத்த ஆட்டிற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், அதன் ஓவியத்தை வரைவற்கு கட்டுமான பணிக்குழுவினர் ஏற்பாடு செய்தனர்’’ என்றார். இந்த ஆடு போலவே தேவ ஆட்டுக்குட்டியான ஆண்டவரும் நமக்காக தன் இன்னுயிரைக் கொடுத்தார்.