Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குங்குமத்தை மாங்கல்யத்தில் பூசலாமா? பிரச்னை தீரலையா! செவ்வாயில் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2020
04:06

*விதியை விதையாகவும், முயற்சியை நிலமாகவும் ஒப்பிடலாம். விதைகள் இல்லாத நிலமும், விதைக்கப்படாத விதையும் அறுவடைக்குத் தயாராவதில்லை.
*விதையும் நிலமும் ஒன்று சேர்ந்தால் தான் பயிர்கள் வளர்வது போல, விதியும் முயற்சியும் சேர்ந்துதான் ஒருவனுக்கு வளர்ச்சியைத் தருகின்றன.
*செயல்களைச் செவ்வனே செய்பவன் செயலுக்கான பலனை அடைகிறான். நற்செயல் களால் இன்பமும், தீயசெயல்களால் துன்பமும் விளைகின்றன.
*முயற்சி இருந்தால்ஒருவனால் எதையும் சாதிக்கமுடியும். ஆனால், செயலற்று வாளாவிருந்தால் எதையும் வாழ்வில் பெறமுடியாது.
*ஒரு சிறு நெருப்பானது வீசப்படும் காற்றின் வேகத்தால், பெரிய தீயாக மாறுவதுபோல, சாதகமான விதி பலவீனமாகஇருந்தாலும், முயற்சியால் அதனை பன்மடங்கு பெருக்கிக் கொள்ளமுடியும்.
*எப்போதும் பேராசையில் உழன்று கொண்டிருக்கும் ஒருவன் விதி ஒருபோதும் உதவுவதில்லை.
*எண்ணெய் இல்லாத விளக்கு அணைந்துவிடுவதைப்போல முயற்சி இல்லாமல் சோம்பேறியாக இருப்பவனிடம் சாதகமாக இருக்கும் விதி தன் ஆதிக்கத்தை இழந்துவிடுகிறது.
*ஒருவன் தானே தனக்கு நண்பனும், பகைவனுமாக இருக்கிறான். நற்பண்புகள்ஒருவனிடம் இருந்து விட்டால் வாழ்வில் சாதித்துக் காட்டமுடியும்.
*புனித நதிகளில் நீராடுவதால் நம் உடல் தூய்மைஅடைவதோடு, மனமும் தூய்மை பெறுகிறது.
*பின்விளைவை யோசிக்காமல் எந்தச் செயலிலும் இறங்குவது கூடாது.
*எப்போதும் உண்மையைப் பேச வேண்டும். பிறருக்கு நன்மை தருவதாகவும் இருக்க வேண்டும்.
*மற்றவர் குழம்பும் விதத்திலோ, தவறாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் பேசுவது கூடாது. மிக்க வருத்தம் அளிக்கும் உண்மைகளைபிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது.
*தீய வழியில் செல்பவன் சிறிதுகாலம் வளமுடன் வாழ்வது போல இருக்கும். ஆனால்,முடிவில் முற்றிலும் அழிந்து போவது உறுதி. நேர்மைவழியில் நடப்பவனுக்கு வாழ்வில் என்றும் தோல்வி கிடையாது என மனுநீதி குறிப்பிடுகிறது.
*பெற்றோர்கள் குழந்தைகளிடம் அன்பு, கருணை போன்ற நற்பண்புகளை சிறுவயது முதலே உருவாக்க முயல வேண்டும். அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்க்கவேண்டியதும் அவசியம்.
*மனிதன் வாழும் காலத்தில் பிறருக்கு நன்மை செய்ய முயல வேண்டும். இறந்த பின்,பிறருக்கு எந்தவிதத்திலும் அவன் பயன்படப்போவதில்லை.
*மற்றவர்களின் நலனுக்காக தங்கள் நலனைக் கூட தியாகம் செய்பவர்களே மகான்கள். அவர்களின் மனதில் சுயநலத்திற்கே இடமே இல்லை.
-வித்யாதீர்த்தர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar