ராமா... ராமா என நாமம் சொல்லி பாடணும் ! உலகம் முழுவதும் விழாக்கோலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2020 07:08
பகவான் ஸ்ரீராமர் பிறந்த அயோத்தி மண்ணில் அவருக்கு கோயில் கட்டுவற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மகாவிஷ்ணு அவதாரங்களில் சிறப்பானது ராமாவதாரம். மனித அவதாரம் எடுத்து வாழ்க்கை தத்துவத்தை சாமான்யனுக்கு உணர்த்தினார் ராமபிரான். ராமாயண காப்பிய நாயகனான இவர் ஏகபத்தினி விரதனாக இருந்தார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதை கடைபிடித்தார். ஒரு சொல் ஒரு வில் ஒரு இல் என்று வாழ்ந்தார். தினமும் ராமா ... ராமா என்ற திருநாமத்தை ஒருவர் சொல்லும் போது துன்பங்களில் இருந்து விடுபடலாம். பூமியில் கடவுளின் ராஜ்யம் அமைவதே ராமராஜ்யம். இதற்கு அச்சாரமாக அயோத்தியில் ராமபிரானுக்கு பிரமாண்ட கோயில் கட்டப்பட உள்ளது. பேராசிரியர்கள் வினாய் பாண்டே, ராமச்சந்திர பாண்டே . ராமநாராயண் திரிவேதி அடங்கிய குழுவினர் பூமி பூஜை செய்வர்.
மேலும்
அயோத்தியில் பூமி பூஜை : உலகம் முழுவதும் விழாக்கோலம் »