குஜராத்தின் ஆமதாபாத்தை சேர்ந்த சோம்புரா குடும்பத்தினர் ராமர் கோயிலை வடிவமைத்துள்ளனர். இவர்கள் 15 தலைமுறையாக ஸ்தபதியாக உள்ளனர். இந்தியாவில் அக் ஷார்தம், சோம்நாத் உள்பட 131 மற்றும் லண்டன் சுவாமி நாராயண் உள்பட வெளிநாடுகளில் 15 கோயில்களை வடிவமைத்துள்ளனர். தற்போது சந்திரகாந்த் சோம்புரா 77, மேற்பார்வையில் அவரது மகன்கள் நிகில் ,55, ஆஷிஷ் 49, இணைந்து அயோத்தி ராமர் கோயிலை புதிதாக வடிவமைத்துள்ளனர். ஆஷிஷ் கூறுகையில், தந்தை சந்திரகாந்த் இளம் பருவத்தில் இருந்தே கோயில் வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர். வாஸ்து சாஸ்திரம், சிறபக்கலை நுணுக்கங்கள் அறிந்தவர். 1989-ல் ராமர் கோயில் மாதிரியை ஆறு மாதத்தில் வடிவமைத்தார். 1989-ல் ராம் ஜென்ம பூமி வளாகத்துக்கு அப்போதைய வி.எச். பி..தலைவர் அசோக் கிங்கால் என் தந்தையை அழைத்து சென்றார். அப்பகுதி ராணுவ பாதுகாப்பில் இருந்தது. இடத்தை அளப்பதற்கு எந்த பொருளையும் கொண்டு செல்ல அனுமதியில்லை. கால்களால் அளவு எடுத்தார். 30 ஆண்டுகளுக்கு பின் அவரது கனவு நனவாக உள்ளது. தற்போது வயது மூப்பு காரணமாக ராமர் கோயில் வடிவமைப்பு தொடர்பான ஆலோசனைகளை வீட்டில் இருந்தவாறு தருகிறார். வட இந்தியாவில் பிரபலமான நாகரம் கட்டடகலை அடிப்படையில் ராமர் கோயில் அமையும். கோயில் கருவறையின் மீதான விமானம் சதுர அமைப்பில் இருக்கும் எண் கோண வடிவில் கருவறை என கோயில் பிரமாண்டமாக இருக்கும் என்றார்.
மேலும்
அயோத்தியில் பூமி பூஜை : உலகம் முழுவதும் விழாக்கோலம் »