Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சகோதரத்துவத்தின் அடையாளம்: ... உலகளவில் அதிகம் பேர் பார்த்த அயோத்தி அடிக்கல் நாட்டு விழா உலகளவில் அதிகம் பேர் பார்த்த ...
முதல் பக்கம் » ஆன்மிகபூமி அயோத்தி » சிறப்பு தகவல்கள்
ராமர் கோவில் பூமி பூஜை ஒரு மகத்தான நிகழ்ச்சி: சத்குரு புகழாரம்
எழுத்தின் அளவு:
ராமர் கோவில் பூமி பூஜை ஒரு மகத்தான நிகழ்ச்சி: சத்குரு புகழாரம்

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
12:08

 கோவை: ”ராமர் தனது வாழ்க்கை முழுவதும் பல விதமான கஷ்டமான சூழ்நிலைகளை எதிர்கொண்டாலும், எப்போதும் அமைதியாகவும், ஆனந்தமாகவும் உத்தம மனிதராக வாழ்ந்தவர். அவரை போன்ற உயர்ந்த மனிதர்கள் தான் நாட்டுக்கு தேவை” என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

ராமர் கோவில் பூமி பூஜையை முன்னிட்டு சத்குரு தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: அயோத்தியில் நடக்கும் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை என்பது நாட்டில் நடக்கும் மகத்தான ஒரு நிகழ்ச்சி. ஏனென்றால், உலகில் பல மனிதர்கள் வாழ்ந்து மறைகின்றனர். ஆனால், சிலர் மட்டுமே நம் மனதிலும் இதயத்திலும் நீங்காத இடத்தை பிடிக்கின்றனர். அந்த வகையில், நம் நாட்டில் சிவன், ராமர், கிருஷ்ணர், புத்தர் போன்ற மகத்தான மனிதர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு பிறகும் நம் உள்ளத்தில் நீங்காத இடம்பிடித்துள்ளனர். இது ஒரு கடவுள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல.

ராமர் ஒரு மனிதராக பிறந்தார். மனிதராக வாழ்ந்தார். மனிதராக இறந்தார். ஆனால், அவர் தனது அற்புதமான குணநலன்களால் புருஷோத்தமனாக வாழ்ந்தார். மனிதர்களுக்குள் உத்தமமாகவும் உயர்ந்த தன்மையிலும் வாழ்ந்த மனிதனை புருஷோத்தமன் என கூறுவோம். அரசனாக இருந்த ராமர் ஒரு சிறு வாக்குறுதியால் அரசாட்சியை துறந்து காட்டுக்கு சென்றார். அவருடைய மனைவியையும் ஒருவர் கடத்தி சென்றார். சீதையை மீட்க போர் புரிந்து ராவணனை வதம் செய்தார்.

பின்னர், எதிரியாக இருந்தாலும் ராவணன் மிகப்பெரிய சிவ பக்தனாக இருந்த காரணத்தால் ராமர் அவரை கொன்றதற்காக ஒரு வருடம் பிராயச்சித்தம் மேற்கொண்டார். தனது வாழ்க்கையில் பல விதமான கஷ்டங்களை சந்தித்தாலும் அவர் தனது செயலில் எவ்வித கோபமோ வெறுப்போ இன்றி செயல்பட்டார். உள்நிலையில் அமைதியாகவும், சமநிலையாகவும், ஆனந்தமாகவும் வாழ்ந்தார். ராமரை ஒரு தனி மனிதராக பார்க்கக் கூடாது, பல அரிய குணங்களை ஒட்டுமொத்தமாகக் கொண்ட ஒரு உத்தமராகவே பார்க்க வேண்டும். இது போன்ற உயர்ந்த குணநலன்களுடன் இருக்கும் மனிதர்கள் தான் நமக்கு எப்போதும் தேவை.

500 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து படையெடுத்து வந்தவர்கள் நம் கோவில் களை இடித்து நாசம் ஆக்கினார்கள். இதனால், நம் நாட்டின் ஆன்மாவே சற்று காயம்பட்டது. ரணமாக இருந்த அந்த காயம் இப்போது ராமர் கோவில் கட்டுமானம் மூலம் ஆறி இருக்கிறது. இரு சமூகங்களுக்கு இடையே நடந்த தேவையற்ற மோதல்கள் இதன்மூலம் முடிவுக்கு வந்து உள்ளது. ஏராளமான மக்களின் மனங்களும் இதயங்களும் குளிர்ந்திருக்கின்றன. இன்று கொண்டாடும் அதே வேளையில் தேசப்பற்றும் ஒற்றுமையும் உயிர்த்தெழுவதை முழு தேசமும் கொண்டாட வேண்டும். இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.

 
மேலும் ஆன்மிகபூமி அயோத்தி சிறப்பு தகவல்கள் »
temple news
தீபாவளியை ஒட்டி ஏராளமான கதைகள் உண்டு. அவற்றில் முதலாவதாகச் சொல்லப்படுவது நரகாசுரன் கதை. நரகாசுரனை ... மேலும்
 
temple news
அயோத்தி ; ராமாயணத்தில் சீதா தேவி பிறந்த ஊராக கூறப்படுவது, சாணக்யாபுரி. நேபாள நாட்டில் தற்போதுள்ள ... மேலும்
 
temple news
ஐதாராபாத்: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, ராமருக்கு தங்க பாதுகையை காணிக்கை படைக்க ... மேலும்
 
temple news
வாரணாசி: ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, ‛ கடவுள் ராமர் நமது மூதாதையர். ... மேலும்
 
temple news
அயோத்தி; உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம், வரும், 22ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar