Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் ... இருக்கன்குடி கோயிலுக்கு ராஜகோபுரம்: ரூ. 63 லட்சம் அனுமதி! இருக்கன்குடி கோயிலுக்கு ராஜகோபுரம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித யாத்திரை செல்லும் இந்துக்களுக்கு மானியம்: தமிழக அரசு அறிவிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 மே
2012
11:05

மானசரோவர் புனித யாத்திரைக்குச் செல்ல இந்திய வெளியுறவுத் துறையால், தெரிவு செய்யப்படும் தமிழகத்தைச் சேர்ந்த, 250 இந்துக்களுக்கும், முக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளும், 250 இந்துக்களுக்கும் என, மொத்தம் 500 பேருக்கு, தமிழக அரசு சார்பில் மானியம் வழங்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோர் புனித யாத்திரை செல்ல அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. அதே போல், இந்துக்களுக்கும் மானியம் வழங்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. இதனை ஏற்று, இந்துக்களுக்கும் மானியம் வழங்கும்  புது திட்டத்தை முதல்வர்  ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டசபையில், நேற்று இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: வாக்குறுதி: கிறிஸ்தவர்கள் ஜெருசலம் புனித யாத்திரை மேற்கொள்ளவும், இந்துக்கள் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள, முக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளவும், அரசு சார்பில் உதவி செய்யப்படும் என, 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, நான் வாக்குறுதி அளித்திருந்தேன்.  வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான, ஜெருசலம் சென்று வருவதற்கு, அரசு நிதி உதவி அளிக்கும் என்றும், இந்தத் திட்டம் அனைத்து கிறிஸ்தவப் பிரிவினரையும் உள்ளடக்கியதாக அமையும். முதற்கட்டமாக, 500 கிறிஸ்தவர்கள் ஜெருசலம் சென்று வர  ஏற்பாடு செய்யப்படும் என்றும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் அறிவித்தேன். இதையடுத்து, இதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டன.

விருப்பம்: இந்துக்களைப் பொறுத்தவரை, ஆன்மிகம் தேடும் ஒவ்வொருவருக்கும், ஒரே ஒரு முறையாவது, சீனாவில் உள்ள மானசரோவர் சென்று பார்க்க வேண்டும் என்பதும், நேபாள நாட்டில், சாளக்கிராம் மலையில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றான முக்திநாத் சென்று தரிசிக்க வேண்டும் என்பதும், அவர்களின் விருப்பமாக உள்ளது. எனவே, இதை கருத்தில் கொண்டு, சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாள நாட்டில் உள்ள முக்திநாத் ஆகிய இடங்களுக்கு செல்ல விரும்பும் இந்துக்களின் பயணச் செலவிற்கு மானியம் வழங்கப்படும்.

500 பேருக்கு: இந்த அரசு மானியம், மானசரோவர் புனித யாத்திரைக்குச் செல்ல இந்திய வெளியுறவுத் துறையால், தெரிவு செய்யப்படும். தமிழகத்தைச் சேர்ந்த, 250 இந்துக்களுக்கும், முக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளும், 250 இந்துக்களுக்கும் என, மொத்தம் 500 பேருக்கு வழங்கப்படும். மானசரோவர் புனித  பயணத்திற்கு, ஒரு நபருக்கு ஆகும் மொத்த செலவான ஒரு லட்சம் ரூபாயில் 40 ஆயிரம் ரூபாயும், முக்திநாத் புனிதப் பயணத்திற்கு ஒரு நபருக்கு ஆகும் செலவான,  25 ஆயிரம் ரூபாயில் 10 ஆயிரம் ரூபாயும் மானியமாக வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar