Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழவூர் நாறும்பூநாதசுவாமி கோயிலில் ... ஞானத்திற்கு சமமான பொருள் இல்லை: சிருங்கேரி சுவாமிகள் அருளுரை! ஞானத்திற்கு சமமான பொருள் இல்லை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகுண்ட பெருமாள் கோவிலில் இன்று பிரம்மோற்சவம் துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 மே
2012
11:05

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், இன்று காலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் முக்கியமானது வைகுண்டப் பெருமாள் கோவில். பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. கோவில் முழுவதும் மணல் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோவில், ஸ்ரீபரமேச்சுர விண்ணகரம் என்றும் அழைக்கப் படுகிறது. இந்திய தொல்பொருள் துறை பராமரிப்பில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் மே மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். கொடியேற்றம்வழக்கம்போல் இந்த ஆண்டு பிரம்மோற்சவம் இன்று துவங்குகிறது. காலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். அதன் பின், சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடைபெறும். இரவு சிம்ம வாகனம் உற்சவம் நடைபெறும். நாளை காலை ஹம்ச வாகனம், இரவு சூர்ய பிரபை உற்சவம் நடைபெறும். கருட சேவைபிரபல உற்சவமான கருட சேவை, 19ம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறும். இரவு ஹனுமந்த வாகனம் உற்சவம் நடைபெறும். மறுநாள் காலை சேஷ வாகனம், இரவு சந்திர பிரபை, 21ம் தேதி மோகினி அவதாரம், இரவு யாளி வாகனம், 22ம் தேதி காலை சப்பரம், இரவு யானை வாகனம் நடக்கிகறது. வரும் 23ம் தேதி மாலை திருத்தேர் திருமஞ்சனம், 24ம் தேதி காலை திருப்பல்லக்கு, இரவு குதிரை வாகனம், 25ம் தேதி காலை தீர்த்தவாரி, இரவு புண்ணியகோடி விமானம், 26ம் தேதி காலை சாந்தி திருமஞ்சனம், இரவு சப்தாவரணம், 27 மற்றும் 28ம் தேதி இரவு விடையாற்றி உற்சவம், 29ம் தேதி இரவு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கண்ணபிரான், ஆய்வாளர் குமரேசன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar