Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சதுர்த்தி விழா ... பிள்ளையார்பட்டியில் சிவ பூஜை அலங்காரத்தில் விநாயகர் பிள்ளையார்பட்டியில் சிவ பூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழாவை கண்காணிக்க குழு: சிலை வைத்தால் நடவடிக்கை
எழுத்தின் அளவு:
விநாயகர் சதுர்த்தி விழாவை கண்காணிக்க குழு: சிலை வைத்தால் நடவடிக்கை

பதிவு செய்த நாள்

20 ஆக
2020
11:08

 கடலுார் : விநாயகர் சதுர்த்தி விழா விமர்சியாக கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கடலுார் மாவட்டம் முழுவதும் போலீசார், வருவாய்த் துறையினர் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 22ம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கொரோனா நோய் பரவலை தடுக்க பொது விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கடலுார் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை வீடுகளில் எளிமையாக கொண்டாட அரசு அறிவுறுத்தியுள்ளது. பொது இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்து விழா கொண்டாடுதல், ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகளுடன் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி ஆலோசனை நடத்தினார்.காவல்துறை அதிகாரிகள், சப் கலெக்டர்கள், ஆர்.டி.ஓ.,க்கள் உள்ளாட்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடவும், தடையை மீறினால் நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி போலீஸ் உட்கோட்ட பகுதியில் அரசியல் கட்சியினர் மற்றும் ஆன்மிக அமைப்பினரை அழைத்து,சப் கலெக்டர் மற்றும் டி.எஸ்.பி.,க்கள் அறிவுறுத்தினர்.

கண்காணிப்பு குழுஇந்நிலையில், விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவோம் என, சிலர் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா சிலைகள் வைத்து கொண்டாடுவதை கண்டறிந்து முன் கூட்டியே தடுக்க, போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் கண்காணிப்பு குழு அமைத்துள்ளனர்.வருவாய்த்துறையினர் போலீசார், கிராம பிரமுகர்கள் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர், ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி விழாவை பிரமாண்டமாக கொண்டாடிய பகுதிகள் மற்றும் அமைப்புகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அரசின் தடையை மீறும் பட்சத்தில், வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar