திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை விழா: மாலை 5.00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2020 12:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவின் 10ம் நாளான இன்று (நவ.29) அதிகாலை 03.30 மணி அளவில் ஸ்வாமி சன்னதி மூல கருவறை முன் “ ஏகன் அனேகன்” என்பதை குறிக்கும் வகையில் 5 மடக்குகளில் பஞ்சமுகதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. விழாவில் அரசு உத்தரவுப்படி பொதுமக்கள் அனுமதியில்லை. எனவே கோயில் வலைத்தளம் http://www.arunachaleswarartemple.tnhrce.in/, https://www.youtube.com/channel/UC2dzxD-qouX44-N1nowCeKg மற்றும் தினமலர் இணைய தளத்தில் மாலை 5.00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.