Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை ... கமுதக்குடி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பணி செய்ய வேண்டிய கோவில்கள்: கண்டறியும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2020
04:11

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள, 1,193 கோவில்களில் திருப்பணி செய்ய வேண்டிய கோவில்களை கண்டறிதல் பணி நடந்து வருகிறது,’’ என, அறநிலையதுறை ஆணையர் பிரபாகர் கூறினார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திருப்பணி செய்ய வேண்டிய கோவில்களை கண்டறியும் பணிகள் குறித்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது: தர்மபுரி கோட்டை காமாட்சியம்மன் உடனுறை மல்லிகார்ஜூனசுவாமி கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் மேடாக உள்ளதால், மழைக்காலங்களில் கோவில் வளாகத்திற்குள் தண்ணீர் தேங்கும் சூழல் உள்ளது. தேங்கும் மழை நீரை, கழிவுநீர் கால்வாய் வழியாக வெளியேற்ற நகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து, செயல் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

காமாட்சியம்மன் சன்னதிக்கு முன் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கான்கிரிட் கூரை சிதலமடைந்துள்ள நிலையில், அதை அகற்றவும், மல்லிகார்ஜூனேஸ்வரர் கருவறையின் உத்திரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதை சீர்செய்ய வேண்டும்.கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான உயர்நீதிமன்ற வல்லுநர் குழுவிடம் ஒப்புதல் பெற்று, இக்கோவில் திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நல்லம்பள்ளி தாலுகா ஏரிகோடிப்பட்டி வேணுகோபாலசுவாமி கோவில், இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், கன்னம்பள்ளி வெங்கட்ரமணசுவாமி கோவிலில் மாநில குழுவின் ஒப்புதல் பெற்று திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள, 1,193 கோவில்களில் திருப்பணி செய்ய வேண்டிய கோவில்களை கண்டறிதல் பணி நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது சப்–கலெக்டர் பிரதாப், தர்மபுரி அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
சென்னை; ஆதிமூலப் பெருமாள் கோவிலில் திருப்பணி மேற்கொள்ளவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. சென்னை, ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar