Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடராஜர் கோவில் சுரங்க வடிகால் ... ஆனாய நாயனார் குருபூஜை விழா ஆனாய நாயனார் குருபூஜை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணி நடக்குமா?
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணி நடக்குமா?

பதிவு செய்த நாள்

11 டிச
2020
03:12

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் மேல்தளம் சிதிலமடைந்து முதல் பிரகாரத்தில் மழை நீர் ஒழுகும் ஆபத்தான நிலை ஏற்பட்டு இருப்பதால், உடனடியாக திருப்பணி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் அட்டவீரட்டானங்களில் இரண்டாவது தலமாகும். அந்தகாசசூரனை வதம் செய்ய சிவபெருமான் மகாபைரவராக அவதாரம் எடுத்த ஸ்தலம். ஏராளமான சிறப்புமிக்க பழமையான கோவில். இதன் உள்பிரகாரம் சிதிலமடைந்து மேற் கூரை ஒழுகுகிறது. கும்பாபிஷேகம் நடைபெற்று 15 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், கோவில் சிதிலமடைந்து வருவது மக்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. இக்கோவிலுக்கு ஏராளமான நிலங்கள் உள்ளது. கடைகள் மூலம் வருவாய், பக்தர்களின் உண்டியல் வசூல் இப்படி அதிக வருவாய் உள்ள கோவில், கவனிக்கப்படாமல் இருப்பது பக்தர்களை மட்டுமல்லாது கோவில் கருவறை சுவற்றில் ராஜராஜ சோழனின் தாய் வானமாதேவி பிறந்த ஊர், அவ்வையார் அகவல் பாடியது, கபிலர் வடக்கிருந்து உயிர் நீத்தது உள்ளிட்ட கல்வெட்டுகள் பதித்த கருவறை சுவரும் பாதிக்கப்படும் என்பதால் வரலாற்று ஆய்வாளர்களும், பொது மக்களும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

கோவிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்வதற்கான திட்ட மதிப்பீட்டை இந்து சமய அறநிலையத்துறை கீழ்மட்ட அதிகாரிகள் அவ்வப்போது அனுப்பி வைக்கும் நிலையில், உயர்மட்ட அதிகாரிகளை சென்றடையும் போது அது ஆண்டுகளை கடந்து விடுவதால், மீண்டும் மீண்டும் மதிப்பீடுகள் செய்து காலம் கடத்தும் அவலம் தொடர்கிறது. பல லட்சம் ரூபாய் வருவாய் உள்ள கோவிலின் நிலையைக் கண்டு பக்தர்கள் கவலைப்பட மட்டுமே முடிகிறது. இனியும் காலதாமதம் ஏற்படுத்தாமல் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar