பதிவு செய்த நாள்
26
ஜன
2021
10:01
அன்னூர்:மொண்டிபாளையம், பெருமாள் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது. மேலைத்திருப்பதி என்று அழைக்கப்படும் மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், 57ம் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 25ம் தேதி வரை தினமும் காலையில் பெருமாள் திருவீதி உலா நடந்தது. தினமும் இரவு வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் உலா நடந்தது.நேற்று காலையில் அம்மன் அழைத்தலும், சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. உற்சவத்தில், பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று காலை 8: 00 மணிக்கு, பெருமாள் திருவீதி உலாவும், இரவு 8:00 மணிக்கு யானை வாகனத்தில் உலாவும் நடக்கிறது. நாளை 27ம் தேதி காலை 6:00 மணிக்கு, வெங்கடேச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக தேருக்கு எழுந்தருளுகிறார். காலை 11:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. அறங்காவலர்கள், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். 28ம் தேதி காலையில் பெருமாள் திருவீதி உலாவும், இரவு பரிவேட்டையும் நடக்கிறது.