அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வேலாயுதபுரத்தில் வெள்ளியம்பல விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் , கணபதி, விக்னேஸ்வரர், நவக்கிரக பூஜைகள் நடந்தன. நேற்று காலை தீபாராதனையுடன், கோபுரத்துக்கு புனித நீர் தெளிக்க கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மகாஜன தலைவர் நாராயணசாமி, விழா குழுவினர்கள் தர்மதுரை, சண்முகராஜா, பெரியமுத்து கணேசன், குருமாணிக்கம் மற்றும் பன்னிரு திருமுறை மன்றத்தினர் செய்திருந்தனர்.