Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! வளம் தரும் தெய்வம் மூதேவியை புறக்கணிப்பது ஏன்? ஓர் ஆய்வு! வளம் தரும் தெய்வம் மூதேவியை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலப்பபுரம் கோயிலில் விசாக திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2012
10:06

பாவூர்சத்திரம்:மயிலப்பபுரம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் விசாக திருவிழா 10 நாட்கள் நடந்தது.மயிலப்பபுரம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசாக திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் மதியம் உச்சிகால சிறப்பு பூஜைகள் நடந்தது. 8ம் திருநாளில் மாலை 6 மணிக்கு பாவூர்சத்திரம் கணேஷ் தங்கமாளிகை உரிமையாளர் கருணாகரன் தலைமையில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.9ம் திருநாளில் இரவு 7 மணிக்கு துரைராஜ் அன்னதானம் வழங்கினார். இரவு 9 மணிக்கு நையாண்டி மேளம், கரகாட்டம் நடந்தது. 8.30 மணிக்கு மேல் கணேசர் சப்பரத்தில் அமர்ந்து சின்னக்குமார்பட்டி, வெங்கடாம்பட்டி, ராஜகுடியிருப்பு, தெற்கு மயிலப்பபுரம் வழியாக நையாண்டி மேள்துடன் கோயில் வந்தடைந்தது. 10ம் திருவிழா காலை 11 மணிக்கு செண்டாமேளத்துடன் பிள்ளையார் கோயிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் புறப்பட்டு கோயில் வந்தது.மதியம் 12.30 மணி சுவாமிக்கு பாலாபிஷேகம், உச்சிகால சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.

இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கரகம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், இன்னிசை, குறவன் குறத்தி நடனம், நையாண்டி மேளம், செண்டாமேளம் நடந்தது. முருகபெருமான் மயில் வாகனத்தில் கோயில் வளாகத்தை சுற்றிவந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.அதிகாலை 5 மணிக்கு வாணவேடிக்கை நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar