Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இருக்கன்குடி மாரியம்மன் அடியார் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரையார் மலைவாழ் மக்கள் மழை வேண்டி வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2012
11:06

விக்கிரமசிங்கபுரம்: மழை வேண்டி காரையார் மலைவாழ் பழங்குடியின காணி மக்கள் வனப்பகுதியில் உள்ள கரையான் புற்றுக்கு விசேஷ வழிபாடு செய்தனர். காரையாறில் வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்து வாழ்ந்து வருபவர்கள் மலைவாழ் பழங்குடியின மக்கள். பருவமழை பெய்ய தவறியதன் காரணமாக காரையார் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை சேர்ந்த சின்னமயிலாறு, பெரியமயிலாறு, அகஸ்தியர்நகர், சேர்வலார், இஞ்சிக்குழி ஆகிய மலைவாழ் கிராமங்களை சேர்ந்த காணியின மக்கள் மழைவேண்டி விசேஷ வழிபாடு நடத்த முடிவு செய்தனர். இக்கிராமங்களை சேர்ந்த சுமார் 40 பேர் காரையார் பாணதீர்த்த அருவியின் மேல் உள்ள வனப்பகுதிக்கு சென்று அங்கிருந்த கரையான் புற்றுக்கு தங்களின் குல வழக்கம்போல் மந்திரம் ஓதி கரையான் புற்றுமேல் தண்ணீர் ஊற்றி விசேஷ வழிபாடு செய்தனர். பின்னர் மழை வேண்டி கொக்கரபாட்டு என்ற பாட்டு பாடினர்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட காணியின மக்களிடம் கேட்டபோது, ""எங்களின் குல வழக்கப்படி இவ்வாறு பூஜை செய்தால் மழை பெய்யும். நாங்கள் இந்த பூஜையை நேற்று முன்தினம் செய்தோம். எங்களின் பிரார்த்தனை வீண்போகவில்லை. பிரார்த்தனை நடந்த அன்று மாலையே வனப்பகுதியில் மேகமூட்டம் காணப்பட்டது. அன்று இரவே அப்பகுதியில் சாரல் மழை பெய்யத் துவங்கிவிட்டது. தொடர்ந்து வனப்பகுதிக்குள் இரண்டாவது நாளாக நேற்று (15ம் தேதி) மழை பெய்து கொண்டிருக்கிறது என்று கூறினர். இந்நிலையில் நேற்று காரையார், சேர்வலார், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் மாலை சுமார் 4 மணிக்கு மேல் லேசான சாரல் பெய்யத் துவங்கியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பள்ளிக்கரணை; பள்ளிக்கரணை சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தை ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா நாளை 25ம் தேதி கோலாகமாக நடைபெற ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருச்சானூர் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் பத்மாவதி தாயார் சந்திர பிரபை வாகனத்தில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை;  திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில் தியாகராஜ சுவாமி புதிய தேர்  திருப்பணியை குருமகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar