Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » தங்கக்குதிரை தானம்
படலம் 93: தங்கக்குதிரை தானம் செய்யும் முறை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2012
12:06

93வது படலத்தின் தங்கக்குதிரை தானம் செய்யும் முறை கூறப்படுகிறது. முதலில் இந்த ஆகமத்தில் வெற்றிக்காக சொல்லப்பட்ட தங்க குதிரை தானம், பத்தாயிரம் அஸ்வமேதயாக பலத்தைவிட உயர்ந்ததான பலத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. பிறகு ஆயிரத்தி எட்டு, ஐநூற்றி நான்கு, 52, 108 கணக்குள்ள தங்கத்தால் லக்ஷணத்துடன் கூடிய குதிரை செய்து, அதன்மேல் வெள்ளியால் பஞ்ச கல்யாணம் என்ற அங்க அழகை செய்யவும். பிறகு துலாபாரதான முறைப்படி வேதிகை, குண்டம், மண்டலம் அமைத்து அதன் மத்தியில், தங்கத்தால் செய்யப்பட்டதும் ஸர்வ அலங்காரம் உடையதுமான அந்த குதிரையில் உச்சை ஸ்ரவஸ் என்று பெயர் இட்டு பூஜிக்க, மண்டல பூஜை, ஹோமம், கலசஸ்தாபனம் முதலியவை துலாரோஹண முறைப்படி செய்து, இந்திர புத்தியுடன் சந்தனம், முதலியவைகளால் பூஜித்து பிராம்ணர்களுக்கு ஐந்து நிஷ்கம் தங்க தானம் செய்து அந்த குதிரையை தானம் செய்யவும். ஏழை, குருடு, கருமி, அனாதை இவர்களுக்கு உணவு அளித்தல் முதலியவைகளால் சந்தோஷிக்கவும் என கூறப்படுகிறது. இவ்வாறு 93வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. வெற்றிக்காக தங்க குதிரை தானம் பற்றி கூறப்படுகிறது. பத்தாயிரம் அச்வமேத யாக பலனைவிட மிகவும் உயர்ந்ததாக கூறப்படுகிறது.

2. ஆயிரத்தெட்டு அதில்பாதி ஐநூறு, அதில் பாதி இருநூற்றி ஐம்பது, அல்லது நூற்றி எட்டு அளவுள்ள தங்கத்தினால் லக்ஷணத்துடன் கூடியதாக குதிரையை அமைக்க வேண்டும்.

3. வெள்ளியால் பஞ்ச கல்யாணி அடையாளத்தை செய்யவும், கலைகளால் எல்லா அலங்காரத்துடன் கூடியதாகவும்,

4. வேதிகை மண்டலத்துடன் முன்புபோல் மண்டபம் தீர்மானித்து அதன் நடுவில் உச்சை ச்ரவஸ் என்று பெயருள்ள குதிரையை செய்து வைக்க வேண்டும்.

5. சந்தனம் புஷ்பம் முதலியவைகளால் பூஜித்து பிராம்மணர்களுக்கு குதிரையை கொடுக்கவும். பிராம்மணர்களை தேவேந்திரனாக பாவித்து ஐந்து நிஷ்கம் தங்கத்தை கொடுக்க வேண்டும்.

6. ஏழை குருடானவன், கருமி, அனாதை இவர்களை உணவு முதலியவைகளால் திருப்தி செய்து, மண்டலார்ச்சனை, கலசஸ்தாபனம் ஹோமம் முதலியவற்றை செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஹிரண்யாச்வப்ரதான முறையாகிய தொன்னூற்றி மூன்றாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar