Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பொன்னேரி முருகன் கோவிலில் ... தேய்பிறை அஷ்டமி கோயில்களில் வழிபாடு தேய்பிறை அஷ்டமி கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உள்ளம் எனும் கோவிலில் இறைவனை அடைவது எப்படி?
எழுத்தின் அளவு:
உள்ளம் எனும் கோவிலில் இறைவனை அடைவது எப்படி?

பதிவு செய்த நாள்

11 ஜன
2026
01:01

திருப்பூர்: கொங்கு மண்டல ஆடல்வல்லான் அறக்கட்டளை, திருப்பூர் சபரி டைமண்ட்ஸ் இணைந்து நடத்தும், மார்கழி அருள் மழை என்ற தலைப்பிலான திருமந்திர சிந்தனை வளர்க்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.


ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நேற்று இதன் இரண்டாவது நாள் நிகழ்ச்சியில், வெள்ளகோவில், சிவலோகநாதர் கோவில் பக்தர் குழுவினரின் கோலாட்டம் நிகழ்ச்சி நடந்தது.


தொடர்ந்து, ஆன்மிக சொற்பொழிவாளர் சிவகுமார், ‘உள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பு ஆலயம்’ என்ற தலைப்பில், பேசியதாவது:


இந்த உலகத்தில் மட்டுமல்ல எந்த உலகத்திலும், இங்கு மட்டுமல்ல வேறு எங்கும், இன்று மட்டுமல்ல என்றுமே சிவனுக்கு ஒப்பான தெய்வமே இல்லை. ஒப்பான தெய்வமே இல்லை எனும் போது, சிவனை விட உயர்வான தெய்வம் குறித்து கேள்விக்கே இடமில்லை. பாண்டிய நாட்டின் அரசனும், மந்திரிசபையும், மக்களும் சமண மதத்தினராக இருந்த போதும், ஒற்றைப் பெண்ணாக அந்நாட்டுக்கு மணம் புரிந்து சென்ற சைவ சமயம் சார்ந்த மங்கையற்கரசி அந்நாட்டையே சைவ சமயத்துக்கு மாற்றினார்.


அந்த காலத்திலும், தற்போதும், மத மாற்ற சக்திகள் பெண்களைத் தான் குறிப்பாக மத மாற்றம் செய்ய முயற்சிக்கின்றனர். ஒரு பெண் மதம் மாறிவிட்டால் ஒரு சமுதாயமே மாறிவிடும். நம் மதத்தை, நம் தெய்வத்தை நாம் என்றும் மறந்து விடக்கூடாது. நம் வீட்டில் நம் குழந்தைகளை தெய்வம் குறித்த பாடல்களை பாட வைக்க வேண்டும். அதனை பாடி இறைவனை வழிபாடு செய்ய வேண்டும்.


கோவிலுக்குச் சென்று தேங்காய் பழம் படைத்து, அபிேஷகம் செய்து மட்டுமே தெய்வத்தை அறிந்து கொள்ளலாம்; ஆனால், அருள் பெற முடியாது. பல்வேறு சமய புலவர்கள், தெய்வப் புலவர்கள் பல்லாயிரம் பாடல்களை நமக்கு அருளியிருக்கின்றனர். இறைவன் விரும்புவது அவனை நினைந்து நாம் மனமுருகி வழிபடுவதைத் தான். அந்த வகையில் இறைவனை வழிபாடு செய்ய நமக்கு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர் ஆகியோர் பல்லாயிரம் பாடல்களைத் தந்துள்ளனர்.


உடம்பு என்பது ஆலயம்; அதன் உள்ளே உள்ளம் என்பது கோவில். அதனுள் இறைவன் குடி கொண்டுள்ளான். வாய்வழியாக நாம் பாடும் பாடல்கள் தான் அக்கோவிலுக்குள் நாம் நுழையும் வழி. வெளியே இயங்கும் ஐம்புலன்களையும் அடக்கினால் உள்ளத்துக்குள் உள்ள ஐந்து விளக்குகளும் ஒளி பெறும். அங்கு ஆத்மார்த்தமாக வீற்றிருக்கும் இறைவனை வழங்கலாம். இவ்வாறு அவர் பேசினார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar