Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news விநாயகர் சிலைகள் வைக்க தடை: தமிழக ... பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோதனைகளில் விடுபட சத்ரு சம்ஹார லோக க்ஷேம ஹோமம்
எழுத்தின் அளவு:
சோதனைகளில் விடுபட சத்ரு சம்ஹார லோக க்ஷேம ஹோமம்

பதிவு செய்த நாள்

31 ஆக
2021
09:08

சென்னை: உலக நன்மைக்காகவும், ஹிந்து சமயத்திற்கு ஏற்பட்டுள்ள சோதனைகளில் இருந்து விடுபடவும், சத்ரு சம்ஹார லோக க்ஷேம ஹோமங்கள், சென்னையில் சங்கராலயத்தில் நேற்று நடந்தன.ஹிந்து கலாசாரத்தையும், ஆன்மிகத்தையும் வளர்த்து போதித்து வருகிறது, சுதேசி பத்திரிகை. இதன் சார்பில், நாட்டில் பரவியுள்ள நோயினை அகற்றவும்; பொருளாதார தேக்கத்தில் இருந்து மீண்டு வரவும்; ஹிந்து சமயத்திற்கு ஏற்பட்டுள்ள சோதனைகளில் இருந்து விடுபடவும், சத்ரு சம்ஹார லோக க்ஷேம ஹோமங்கள் நடத்தப்பட்டன.

சென்னை சேத்துப்பட்டு, சங்கரமட சங்கராலயத்தில், நேற்று காலை 9:00 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சியில், நடிகர் எஸ்.வி.சேகர் பங்கேற்று, சங்கல்பம் செய்து கொண்டார். ஆன்மிக பேச்சாளர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் பேசியதாவது:நம் தேசத்தின் தற்பேதைய நிலைமை மாற வேண்டும். நம்மை என்னென்ன துன்பங்கள் சூழ்ந்துள்ளன; அவை யாரால் ஏற்படுகின்றன என்பதை அறிந்து, அவற்றுக்கு பரிகாரம் தேட வேண்டும்.பகவான் கிருஷ்ண பரமாத்மா, தர்மத்தை காப்பாற்ற, நான் வருவேன் என்று கூறியுள்ளார். அவர் வரும் வரை காத்திருக்கக் கூடாது. முயற்சிக்காமல் பகவான் வருவார் என, நாமும் கைகட்டி நின்றால் அழிந்து போவோம்.காஷ்மீர் முதல் குமரி வரை, ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த பெருமை, வல்லபாய் பட்டேலை சாரும். கட்சிகளுக்கு தேசத்தை பற்றி அக்கறை இல்லை.

நம் யாருக்கும் கட்சி உணர்வே இருக்கக் கூடாது; தேசிய பற்று மட்டுமே இருக்க வேண்டும்.இவர்களை வைத்து, தேசம் முன்னேறுவது கஷ்டம். நாட்டின் எதிர்காலம் குறித்து யோசிக்கவே, இந்த சத்ரு சம்ஹார ஹோமம் நடத்தப்படுகிறது.சுப்பிரமணிய சுவாமி அசுரர்களை அழித்தது போல, நாட்டை அழிப்பவர்களிடம் இருந்து காப்பது தான் இந்த யாகம், ஹோமம். அக்னி வளர்த்து யாகம் செய்வதால், நம் வேண்டுதல் நேரடியாக கடவுளை சேரும்.இவ்வாறு அவர் பேசினார்.ஹோமத்திற்கான ஏற்பாடுகளை, சுதேசி பத்திரிகை நிறுவனரும், நிர்வாக ஆசிரியருமான பத்மினி ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar