Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுகவனேஸ்வரர் கோவில் நிலம் 90 ஏக்கர் ... சிறப்பு அலங்காரத்தில் வெங்கடேச பெருமாள் அருள்பாலிப்பு சிறப்பு அலங்காரத்தில் வெங்கடேச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

02 அக்
2021
05:10

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சின்னதடாகம் வட்டாரங்களில் உள்ள பெருமாள் கோவில்களில், புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையையொட்டி, சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

‌‌ பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவிலில், அதிகாலை நடை திறக்கப்பட்டு, சுதர்சன வேள்வி நடந்தது. தொடர்ந்து, உச்சிகால பூஜையில், பெருமாள், பூங்கோதை, செங்கோதை தாயார்களுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஆதிநாராயண பெருமாள் கோவிலில், பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இடிகரையில் உள்ள பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில், பழைய புதூரில் உள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோவில், சின்னதடாகம், பெரியநாயக்கன் பாளையம், திருமலை நாயக்கன்பாளையம் பகுதிகளில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில், செல்வபுரம் தண்டு பெருமாள் கோவில், சாமிசெட்டிபாளையம் வெங்கடரமண பெருமாள் கோவில், நாயக்கனூர், நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோவில், ஜோதிபுரம், பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோவில், சோமையனூரில் உள்ள குண்டு பெருமாள் கோவில், ஒன்னிபாளையத்தில் உள்ள கோமாளி அரங்கன் கோவில், மேல்முடி ரங்கநாதர் கோவில், அப்புலுபாளையத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவில், சாமி செட்டிபாளையத்தில் உள்ள கல்யாண வெங்கடரமண பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பஜனைகளும் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar