Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் ... நெல்லையப்பர் கோயிலில் நவராத்திரி விழா துவக்கம் நெல்லையப்பர் கோயிலில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்
எழுத்தின் அளவு:
குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்

பதிவு செய்த நாள்

07 அக்
2021
04:10

உடன்குடி: குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை9 மணிக்கு கணபதி ஹோமம், யாகசசாலை பூஜையைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் கோயில் பிரகார வீதியுலா நடந்தது. காலை9.40 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகம், தீபாராதனை, நடந்தது. இதில் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், திருச்செந்துார் ஏஎஸ்பி ஷர்சிங் கலந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் கொடியேற்ற நிகழ்வில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளஅனுமதி வழங்கப்பட வில்லை. கோயிலுக்கு வரும் முக்கிய பாதைகள், கடற்கரைசாலை ஆகியவை தடுப்புகளால் அடைக்கப்பட்டிருந்தன. உடன்குடி, திருச்செந்துார்வழியாக வாகனங்களில் வரும் பக்தர்கள்அங்கேயே நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோயிலைச்சுற்றியுள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் கோயில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. இரவு 8 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். விழா நாட்களில் தினமும் இரவு 8 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருள்வார். வரும்15ம்தேதி நள்ளிரவு 12 மணிக்கு கோயில் உள்பிரகாரத்தில் அம்மன் சிம்மவாகனத்தில் எழுந்தருளி மகிசாசூரனை வதம் செய்கிறார். 16ம்தேதி அதிகாலை 3 மணி,5 மணி,6 மணிக்கு உற்சவமூர்த்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. தொடர்ந்து அன்று மாலை 5 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி கோயில் உள்பிரகார பவனியும் கோயிலை வந்தடைந்தவுடன் காப்பு களைதல் நடக்கிறது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள், தசரா குழுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 5,50,100 எண்ணிக்கையில் காப்புகள் இன்று அக்.7ம்தேதி முதல் வழங்கப்படும். காப்புகளைஅரசின் விதிமுறைகளுக்குட்பட்டு பக்தர்கள் கோயில் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar