Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்: ... தும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி கோயிலில்  ஐப்பசி அன்னாபிஷேகம் தும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு 60 கிலோ அரிசியால் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு 60 கிலோ அரிசியால் அன்னாபிஷேகம்

பதிவு செய்த நாள்

20 அக்
2021
04:10

பெரம்பலுார், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு 60 கிலோ அரிசியால் சாதம் தயார் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது.  

அரியலுார் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில் உள்ளது பிரகதீஸ்வரர் கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜசோழன் மகன் ராஜேந்திரசோழனால் கங்கைநதி வரை போராடி வெற்றி பெற்ற சின்னமாக கட்டப்பட்டது. இக்கோவில் உலக பிரசித்திபெற்றது. புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. கோவிலில் சிங்கமுககிணறு, ஒரேகல்லிலில் ஆன நவக்கிரகம் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் உலக அளவில் வியக்க கூடியதில் ஒன்றாக கோவிலில் உள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், பதிமூன்றரை அடி உயரமும் கொண்டதாகும், ஒவ்வொரு வருடமும் ஐப்பசி பவுர்ணமி, அரிசியால் சாதம் சமைத்து கோவிலில் உள்ள பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு காலை மகாபிஷேகம், மாலையில் அன்னாபிசேக அலங்கார தீபாராதனையும் நடைபெறும் வழக்கம்.

இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேகம் ஐப்பசி பெளர்ணமி நாளான இன்று நடந்தது. காலை 7.30 மணிக்கு கணக்கவிநாயகருக்கு அபிஷேகம், 8.30 மணிக்கு கணக்கவிநாயகருக்கு தீபாரதனை, 9 மணிக்கு பிரகதீஸ்வரர் மற்றும் பிரகன்நாயகிக்கு மகாபிசேகம் தீபாரதனை நடந்தது. இதைத்தொடர்ந்து, கோவிலில் உள்ள மடப்பள்ளியில் 60 கிலோ பச்சரியால் சாதம் தயார் செய்யப்பட்டது. பின்னர், உலர்த்தப்பட்டு பேஸ்ட் போல ஆக்கப்பட்டு லிங்கத்தின் மீது அன்னம் சாத்தப்பட்டது. தொடர்ந்து அன்னாபிஷேக அலங்கார தீபாரதனை நடந்தது.  நாளை (21ம் தேதி) பிரகதீஸ்வரருக்கு பிராட்சதை அபிஷேகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar