பதிவு செய்த நாள்
21
அக்
2021
11:10
ஐப்பசி பவுர்ணமி திருநாளில், அனைத்து சிவாலயங்களிலும், சிவலிங்கத்துக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம். நேற்று, திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள சிவாலயங்களில், அன்னாபிேஷக பூஜைகள் நடந்தன.
பெருமாநல்லுார் அருகே அபிஷேகபுரம் கிராமத்தில் அமைந்துள்ள, ஐராவதீஸ்வரர் கோவில், 13ம் நுாற்றாண்டில், வீரராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது என்பதை, கல்வெட்டு தகவல் உறுதி செய்கிறது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் அன்னாபிஷேகம் விமரிசையாக நடக்கிறது.ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. ஐராவதீஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேக பூஜைகளை தொடர்ந்து, அன்னாபிஷேகம் நடந்தது. விரதம் இருந்த பக்தர்கள், அன்னாபிஷேக பிரசாதத்தை அருந்தி, விரதத்தை பூர்த்தி செய்தனர். அவிநாசியில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை, 4:00 மணிக்கு, அபிேஷக பூஜை துவங்கியது; மாலை, 6:00 முதல், 8:00 வரை, அன்னாபிேஷகம் நடைபெற்றது. பச்சரிசியில் வடித்த அன்னம், கனி வகைகளால், லிங்கத்திருமேனிக்கு அபிேஷகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. அதன்பின், ராஜ அலங்கார பூஜையை தொடர்ந்து, அன்னாபிேஷக பிரசாதம் வழங்கப்பட்டது. திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மாலையில் அன்னாபிேஷக பூஜையும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.< திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், திருப்பூர், ஊத்துக்குளிரோடு, காசி விஸ்வநாதர் கோவில், லட்சுமி நகர் அண்ணாமலையார் கோவில், பெரியபாளையம் ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவில், பூச்சக்காடு செல்வவிநாயகர் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதியில், அன்னாபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. கோவில்வழி உகந்தீஸ்வரர் கோவில், செட்டிபாளையம் அண்ணாமலையார் கோவில், சாமளாபுரம் தில்லைநாயகி உடனமர் சோழீஸ்வரர் கோவில்.< வெள்ளகோவில் சோழீஸ்வரசுவாமி கோவிலில், அன்னாபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர். சுவாமி தரிசனத்தை தொடர்ந்து, அபிஷேகத்துக்கு பயன்படுத்திய அன்னம், பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.