Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ... புலிக்குத்தி அம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா புலிக்குத்தி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அபிஷேக பிரியனுக்கு அன்னாபிஷேகம்: சிவாலயங்களில் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
அபிஷேக பிரியனுக்கு அன்னாபிஷேகம்: சிவாலயங்களில் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

21 அக்
2021
11:10

ஐப்பசி பவுர்ணமி திருநாளில், அனைத்து சிவாலயங்களிலும், சிவலிங்கத்துக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம். நேற்று, திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள சிவாலயங்களில், அன்னாபிேஷக பூஜைகள் நடந்தன.

பெருமாநல்லுார் அருகே அபிஷேகபுரம் கிராமத்தில் அமைந்துள்ள, ஐராவதீஸ்வரர் கோவில், 13ம் நுாற்றாண்டில், வீரராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது என்பதை, கல்வெட்டு தகவல் உறுதி செய்கிறது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் அன்னாபிஷேகம் விமரிசையாக நடக்கிறது.ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. ஐராவதீஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேக பூஜைகளை தொடர்ந்து, அன்னாபிஷேகம் நடந்தது. விரதம் இருந்த பக்தர்கள், அன்னாபிஷேக பிரசாதத்தை அருந்தி, விரதத்தை பூர்த்தி செய்தனர். அவிநாசியில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை, 4:00 மணிக்கு, அபிேஷக பூஜை துவங்கியது; மாலை, 6:00 முதல், 8:00 வரை, அன்னாபிேஷகம் நடைபெற்றது. பச்சரிசியில் வடித்த அன்னம், கனி வகைகளால், லிங்கத்திருமேனிக்கு அபிேஷகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. அதன்பின், ராஜ அலங்கார பூஜையை தொடர்ந்து, அன்னாபிேஷக பிரசாதம் வழங்கப்பட்டது.  திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மாலையில் அன்னாபிேஷக பூஜையும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.< திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், திருப்பூர், ஊத்துக்குளிரோடு, காசி விஸ்வநாதர் கோவில், லட்சுமி நகர் அண்ணாமலையார் கோவில், பெரியபாளையம் ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவில், பூச்சக்காடு செல்வவிநாயகர் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதியில், அன்னாபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. கோவில்வழி உகந்தீஸ்வரர் கோவில், செட்டிபாளையம் அண்ணாமலையார் கோவில், சாமளாபுரம் தில்லைநாயகி உடனமர் சோழீஸ்வரர் கோவில்.< வெள்ளகோவில் சோழீஸ்வரசுவாமி கோவிலில், அன்னாபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர். சுவாமி தரிசனத்தை தொடர்ந்து, அபிஷேகத்துக்கு பயன்படுத்திய அன்னம், பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; இந்தாண்டு சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சி மடாதிபதிகள்; ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,  ... மேலும்
 
temple news
காரைக்கால் ; காரைக்கால் மாங்கனித்திருவிழா முன்னிட்டு காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஜேஷ்டாபிஷேகம் செய்து, நம்பெருமாளுக்கு தைலக்காப்பு ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar