சின்னாளபட்டி: செட்டியபட்டி வசந்தம் நகரில், குபேர சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமத்துடன் துவங்கி, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இரு கால யாகசாலை, ஸ்ரீ ருத்ர ஜபம், கனி, மூலிகை பூஜைகள் நடந்தது. விசேஷ வழிபாடுகளுடன் கடம் புறப்பாட்டை தொடர்ந்து, கும்பங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.