தீபாவளியை முன்னிட்டு இன்று (நவ.4) அதிகாலை ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌலீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமிக்கு விஷேச தீபாராதனையுடன், விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பக்தர்களுக்கு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் அருள்பாலித்தார். பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு தீபாவளி அருளாசி வழங்கினார். சுவாமிகளுக்கு ஸ்ரீகாமாட்சி அம்பாள் தேவஸ்தான பிரசாதம் வழங்கப்பட்டது.