Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோனியம்மன் தேர்த்திருவிழா ஏற்பாடு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அணையா விளக்காக அன்னதானம் 637வது நாளாக வினியோகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2022
05:02

பல்லடம்: பல்லடம் அருகே கோவிலில், அணையா விளக்காக செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதான திட்டம் மூலம், 637வது நாளாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா முதல் அலையின்போது,, நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் சொல்லமுடியாத இன்னல்களை சந்தித்தனர். இரண்டாம் அலையின்போது ஏற்பட்ட உயிரிழப்புகளால் எண்ணற்ற குடும்பங்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டன. தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வேலை வாய்ப்பு, வருவாய் இழந்து பல குடும்பங்கள் ஒரு வேளை உணவுக்கும் எதார்பார்த்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இக்கட்டான அச்சூழலில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் தாமாக முன்வந்து உணவு, உடை, மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் என, தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். இதனால், ஆதரவற்றோர், ஏழை எளிய மக்கள் பலர் பயன் பெற்றனர். அவ்வகையில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வதம்பச்சேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீநெல்லுக்குப்பம்மன் கோவில் சார்பில், தொடர்ந்து, 637வது நாளாக நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது. இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில், கொரோனா பாதிப்பின்போது உணவு இன்றி யாரும் சிரமப்படக் கூடாது என்பதால், பொதுமக்கள் பங்களிப்புடன் கோவிலில் தினசரி பூஜைக்கு பின், மதிய உணவு வழங்கினோம். கொரோனா பாதிப்பு குறைந்த பின்னும், ஆதரவற்றோர், முதியவர்கள் பலர் தினசரி உணவு கேட்டு கோவிலுக்கு வந்தனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, தினசரி மதிய உணவு வழங்க தீர்மானித்து, இன்றும் வழங்கி வருகிறோம். வள்ளலார் கூறியபடி, அணையா விளக்குபோல் அன்னதானத்தை தொடர்ந்து வழங்க முடிவு செய்துள்ளோம் என்றனர். நகரப் பகுதிகளில், போதிய நிதி ஆதாரம், தன்னார்வலர்கள்‌ இல்லாததால், கொரோனுவுக்கு பின் உணவு வழங்குவதை பலர் நிறுத்தி விட்டனர். இருந்தும், இதிலிருந்து வேறுபட்டு தினசரி அறுபதுக்கும் மேற்பட்‌‌டவர்களுக்கு கோவில் நிர்வாகம் தவறாமல் உணவளித்து வருவதை பலரும் மனமுவந்து பாராட்டி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar