Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவில் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர உற்சவ விழா நிறைவு அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி கோவில் கும்பாபிஷேகம்; ஆயத்த பணிகளில் தொய்வு
எழுத்தின் அளவு:
அவிநாசி கோவில் கும்பாபிஷேகம்; ஆயத்த பணிகளில் தொய்வு

பதிவு செய்த நாள்

23 மார்
2022
04:03

அவிநாசி:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அரசு அனுமதியளித்தும், ஆயத்தப்பணியில் தொய்வு தென்படுவதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையானது, திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில். சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவாரம் பாடல் பெற்ற இத்தலம், தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமையை கொண்டது.கடந்த 1980ல், சுவாமிக்கு ஏழு நிலையிலும், அம்மனுக்கு ஐந்து நிலையிலும் ராஜகோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

அதன்பின், 1991, 2008ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலுக்கு, 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஆகம விதி.ஆனால், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. திருப்பணிகள் துவங்காததால், கோவிலில் பல இடங்களில், கட்டுமான பணிகள் சேதமடைந்து வருவதாகவும், கோபுரங்கள் பொலிவிழந்து காணப்படுவதாகவும் பக்தர்கள் வேதனைப்படுகின்றனர். கடந்தாண்டு, கோவிலில் ஆய்வு செய்த ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என கூறி சென்றார். அதன் தொடர்ச்சியாக, துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் அடுத்தடுத்து கோவிலை பார்வையிட்டனர். இருப்பினும், பணிகள் வேகமெடுக்கவில்லை என்கின்றனர் பக்தர்கள்.கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டி கூறுகையில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் பணி துவங்கும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாராஹி மந்திராலயத்தில் தேய்பிறை பஞ்சமி திதியொட்டி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணை சுற்றி மூங்கில் தடுப்புகள் அமைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar