நத்தம்: நத்தம் மீனாட்சிபுரத்தில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
திருவிழாவில் முன்னதாக ஏப்ரல் 3 சந்தன கருப்பு சாமி கோவிலில் இருந்து தீர்த்தம் அழைத்து வருதல் மற்றும் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தோரணம் மரம் ஊண்டுதல், விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மன் குளத்தில் இருந்து கரகம் பாலித்து அம்மன் அழைத்து வருதல் நடந்தது. பின் அரண்மனை மாவிளக்கு ,பால்குடம், அக்னிச்சட்டி, சந்தன குடம், முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நேற்று ஏப்ரல் 13, கரகம் அம்மன் குளத்தில் போய் சேர்தல், நிறைவாக அம்மன் மஞ்சள் நீராடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காளியம்மனை தரிசனம் செய்தனர். திருவிழா ஏற்பாடுகளை மீனாட்சிபுரம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.