பரமக்குடியில் தபசு திருக்கோலத்தில் விசாலாட்சி அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2022 02:04
பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரைத் திருவிழாவில் விசாலாட்சி அம்மன் நேற்று காலை தபசு திருக்கோலத்தில் அருள் பாலித்தார்.
இக்கோயிலில் ஏப்., 6 முதல் கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா துவங்கி நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு குதிரை வாகனத்தில் சுவாமி, அம்பாள் திக் விஜயம் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு தபசு திருக்கோலமும், மாலை 6:00 மணிக்கு ரிஷப வாகனத்தில் சந்திரசேகர சுவாமி புறப்பாடாகி, அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 10:30 மணி முதல் 11:30 மணிக்குள் ஈஸ்வரன் கோயிலில், சந்திரசேகர சுவாமி, விசாலாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு சுந்தரராஜ பவனத்தில் சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை காலை 9:45 மணிக்கு ரதவீதிகளில் சித்திரைத் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.