சோழவந்தான்: நாகமலை புதுக்கோட்டை தடாதகை அம்மன், கருப்பசாமி அருள்பெற்ற சந்தன மாரியம்மன் கோயில் பங்குனி உற்சவ விழா 2 நாட்கள் நடந்தது. அம்மனுக்கு பொங்கல் வைத்தும், கரகம், பால்குடம், அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் ஊர்வலமாக சென்று முளைப்பாரியை கரைத்தனர். அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்தனர்.