Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சி சங்கராச்சாரியார் விஜய ... சந்தன மாரியம்மன் கோயில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தனியார் இணையதள சேவை; கோவில்களில் மூட உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2022
07:04

சென்னை: கோவில்களில் தனியார் நிறுவனம் வாயிலாக உருவாக்கப்பட்ட வலைதளங்களை, ஒருவார காலத்திற்கு மூட, அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, அறநிலையத்துறை இணை, துணை, உதவிக் கமிஷனர்கள், கோவில் செயல் அலுவர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோவில்கள் நிர்வாகத்தை கணினி மயமாக்கும் வகையில், ஐ.டி.எம்.எஸ்., எனும் ஒருங்கிணைந்த கோவில் மேலாண்மை திட்டம்; என்.ஐ.சி., எனும் தேசிய தகவல் மையம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சில கோவில்களில் தனியார் நிறுவனம் வாயிலாக வலைதளம் உருவாக்கி, அதை தற்போது வரை பராமரித்து வருவது கவனத்திற்கு வந்துள்ளது. அத்தகைய வலைதளங்கள் பாதுகாப்பு குறைபாடு, ஹாக்கர்ஸ் வாயிலாக தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.எனவே, அனைத்து கோவில்கள் இணைய தளமும் என்.ஐ.சி., நிறுவனம் வாயிலாக மட்டுமே உருவாக்கி பராமரிக்க வேண்டும். அதற்காக அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவில் தொடர்பாக தகவல்கள் அனைத்தும் ஐ.டி.எம்.எஸ்., போர்ட்டல் வாயிலாக, என்.ஐ.சி., நிறுவனத்தால் உருவாக்கப்படும் இணைய தளத்தில் மட்டுமே வெளியிட வேண்டும்.தனியார் நிறுவனம் உருவாக்கிய கோவில் இணையதளங்களை, ஒரு வார காலத்திற்குள் மூட வேண்டும். இதை பின்பற்ற தவறினால், அதனால் ஏற்படும் இழப்புக்களை சம்பந்தப்பட்ட அலுவலர் பொறுப்பாவார். மேலும், சம்பந்தப்பட்டவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு இன்று காவடிகளுடன் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar