Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

நெல்லையில் யஜூர் வேத ஆவணி அவிட்டம் நெல்லையில் 100 ஆண்டுகளுக்கு ஆடிப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடி திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2012
11:07

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடி திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டரின் அவதார பதியில் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் ஆடி திருவிழா துவங்கியது.விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, 8 மணிக்கு பால் அன்னதர்மம், பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, மதியம் 2 மணிக்கு அன்னதர்மம், 3 மணிக்கு திருஏடு வாசிப்பு, மாலை 5 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, இரவு 8 மணிக்கு தர்மம், இனிமம் வழங்கப்பட்டது. தினமும் 7 மணியளவில் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம் போன்ற வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 11ம் திருவிழாவான நேற்று காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடந்தது. 8 மணிக்கு பால் அன்னதர்மம் வழங்கப்பட்டது. 10 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா வைகுண்டர் பவனி நடந்தது. தொடர்ந்து உச்சிப்படிப்பு, பணிவிடை நடந்தது. அதைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அய்யா வைகுண்டரின் தேரோட்டம் நடந்தது. 3.20 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து அன்னதர்மம், மாலை உகப்படிப்பு, பணிவிடை, இரவு இன்னிசை நிகழ்ச்சி, இரவு 1 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா வைகுண்டர் பவனி வருதல், 2 மணிக்கு தர்மம், இனிமம் வழங்கப்பட்டது. தேரோட்ட விழாவில் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள்சபை செயலாளர் வள்ளியூர், தர்மர், பொருளாளர் ராமையா, அய்யாவின் அருள் இசை புலவர் சிவச்சந்திரன், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை நிர்வாக குழு உறுப்பினர்கள் தோப்புமணி உட்பட ஏராளமான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் இசக்கி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar