Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொட்டிபாளையம் விநாயகர் கோவிலில் ... சிவகாசி சிவன் கோயிலில் வைகாசி பிரமோற்சவ தேரோட்டம் சிவகாசி சிவன் கோயிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்தாலம்மன் கோவில் திருவிழாவில்- 75 அடி கழுகு மரம் ஏறிய இளைஞர்கள்
எழுத்தின் அளவு:
முத்தாலம்மன் கோவில் திருவிழாவில்- 75 அடி கழுகு மரம் ஏறிய இளைஞர்கள்

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2022
05:06

சாணார்பட்டி, சாணார்பட்டி அருகேயுள்ள வீரசின்னம்பட்டி முத்தாலம்மன், கோட்டை கருப்பணசாமி, காளியம்மன், பகவதி அம்மன் மாரியம்மன் கோவில்களில் சாமி கும்பிடு திருவிழா நடந்தது.

விழாவையொட்டி கடந்த மே 22 அம்மனுக்கு கம்பம் ஊன்றி, பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. ஜூன் 3 கோட்டை கருப்பணசாமி மேளதாளத்துடன் மாலை அணிவித்து, பொங்கல் வைத்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஜூன் 5 கிராம தெய்வங்களுக்கும், கோட்டை கருப்பணசாமிக்கும் அபிஷேகம் மற்றும் வானவேடிக்கை உடன் அம்மன் கண் திறந்து முத்தாலம்மன் கோவில் வந்தடைதல், காளியம்மனுக்கு சந்தான வர்தினி ஆற்றங்கரையில் கரகம் ஜோடித்து கோவில் வந்தடைந்து, அரண்மனை பொங்கல் வைத்தல் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு, முளைப்பாரி, அக்னிச்சட்டி எடுத்தல் மற்றும் கிடாய் வெட்டி பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வான கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.

அதில் கோவில் முன் உள்ள மூன்று குட்டி கழுகு மரங்களில் இளைஞர்கள் ஏறி அமர்ந்துகொண்டனர், அதன்பின் சுமார் 75 அடி உயரம் கொண்ட என்னை ஊற்றப்பட்ட வலுக்கும் கழுகு மரத்தில் இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏறி, மரத்தின் உச்சியில் இருந்த முடிப்பை எடுத்துக்கொண்டு கீழே இறங்கிய உடன் அந்த இளைஞர் கிடாய் வெட்டினார்.பின் குட்டி கழுவு மரத்தில் இருந்த மூன்று நபர்களும் இறங்கி வெட்டப்பட்ட கிடாயின் தலையை வாயில் கவ்விக் கொண்டு ஓடிய வினோத நிகழ்ச்சியும் நடந்தது. பின் மேளதாளம் முழங்க, வாண வேடிக்கையுடன் அம்மன் பூஞ்சோலை சென்றடைதல் நடந்தது. இன்று ஜூன் 8 காளியம்மன், பகவதி அம்மன், மாரியம்மன் கரகங்கள் மற்றும் முளைப்பாரியுடன் கங்கை செல்லுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை வீரசின்னம்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரயாக்ராஜ்: உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் இன்று (பிப்.,05) காலை 11 மணிக்கு பிரதமர் மோடி புனித ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பழனி; பழநி கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி என பெயர் வரக் காரணமான  நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்வு இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தை மாத அமாவாசையை தொடர்ந்து வரக்கூடிய சப்தமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar