சிவகாசி: சிவகாசி சிவன் கோயில் வைகாசி பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
சிவகாசி சிவன் கோயில் வைகாசி பிரமோற்சவ திருவிழா மே. 30 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் இரவு 8:00 மணிக்கு பூத, காமதேனு, ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடந்தது. முன்னதாக காலையில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.