Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மாகாளியம்மனுக்கு ஆடி பூச்சொறிதல் ... குலசை முத்தாரம்மன் ஆடி கொடை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்கட்டும்செவல் கோயில்களில் ஆடிமாத திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2012
12:08

சிவகிரி : நெல்கட்டும்செவல் வடக்குத்தியம்மன், உச்சினி மாகாளியம்மன், முத்தாலம்மன் கோயில்களில் ஆடிமாத திருவிழா  துவங்கியது. நெல்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள வடக்குத்தியம்மன், உச்சினி மாகாளியம்மன், முத்தாலம்மன் கோயில்களில்  ஆடிமாத திருவிழா துவங்கியது. அன்று வடக்குத்தியம்மன் கோயிலில் அம்மனுக்கு அலங்கார, அபிஷேக, ஆராதனை நடந்தது.  முன்னதாக ஊர் பொதுமக்கள் சார்பில் மாமான்னர் பூலித்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மாலை 6 மணிக்கு உச்சினி மாகாளியம்மன் கோயிலில் தோரணம் கட்டி பொங்கல் சாட்டுதல்  நடந்தது. குற்றாலம் தீர்த்தம்  கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 1 மணிக்கு சாம பூஜை நடந்தது. இரண்டாம் நாள்  வாணவேடிக்கை முழங்க பொங்கல் பானைகள் அழைப்பும், மாலை 3 மணிக்கு கிடாய் வெட்டுதலும், 5 மணிக்கு முத்தாலம்மன்  கோயிலில் கால்நட்டுதலும் நடந்தது. இரவு சொற்பொழிவு, வில்லிசை நடந்தது. மூன்றாம் நாள் பக்தி சொற்பொழிவும், கிராமிய  தெம்மாங்கு பாடல் நிகழ்ச்சியும் நடந்தது. நான்காம் நாளான நேற்று மாலை மஹாபாரத சொற்பொழிவும், கலை நிகழ்ச்சியும்   நடந்தது. ஐந்தாம் நாளான இன்று (4ம் தேதி) சிவபுராணம் சொற்பொழிவும், பட்டிமன்றமும் நடக்கிறது. வாசு., எம்எல்ஏ துரையப்பா,  யூனியன் சேர்மன் தங்கமாரி, தொகுதி செயலாளர் துரைப்பாண்டியன், துணை சேர்மன் சாமிவேல் சிறப்பு அழைப்பாளர்களாக  கலந்து கொள்கின்றனர். நாளை (5ம் தேதி) இரவு 7 மணிக்கு பரதநாட்டியம் நடக்கிறது. 7ம் நாள் மாமன்னர் பூலித்தேவர் அரசு  மேல்நிலைப்பள்ளி சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடக்கிறது. 8ம் நாள் முத்தாலம்மன் கோயிலில் திருவிழா, இரவு 1 மணிக்கு காட்டு நாயக்கன் தெரு பிள்ளையார் கோயிலில்  அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. 9ம் நாள் மாலை 4 மணிக்கு
மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மன் வழியனுப்பு விழாவும் நடைபெறுகிறது. வரும் 14ம் தேதி வள்ளி திருமணம், ஹரிசந்திர  மயான காண்டம் நாடகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தனிநபர் அழைப்பை விரும்பாத ஊர் பொதுமக்கள் சார்பில் விழாக்  குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar