படித்துறை வரத விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2022 04:07
சோழவந்தான்: சோழவந்தான் படித்துறை வரத விநாயகர் கோயிலில் உலக நன்மை வேண்டி சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரம் அபிஷேங்களை பட்டர் கார்த்திக் செய்தார். ஏற்பாடுகளை மலையாளம் கிருஷ்ணய்யர் டிரஸ்ட் பொது மேலாளர் பாலசுப்ரமணியன் செய்தார். குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் விநாயகர் சிறப்பு பூஜைகளை கோயில் நிறுவனர் கோபிநாத் செய்தார். நாகமலை புதுக்கோட்டை ஆனந்த ஐயப்பன் கோயிலில் கற்பக விநாயகருக்கு பூஜையை சுந்தர் பட்டர் செய்தார்.பிரசாதம் வழங்கப்பட்டது.