Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news காரமடை அரங்கநாதர் கோயிலில் ஏகாதசி ... தர்மசாஸ்தா கோயிலில் திருவிளக்கு பூஜை தர்மசாஸ்தா கோயிலில் திருவிளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2022
02:07

ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

108 வைணவ தளங்களில் ஒன்றானதும், தமிழக அரசின் முத்திரை சின்னமான ராஜகோபுரத்தை கொண்ட ஆண்டாள் கோயிலில் ஆண்டு தோறும் ஆடிப்பூர பெருவிழா மற்றும் திருத்தேரோட்ட வைபவம் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இவ்வாண்டும் இவ்விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு காலை கொடி பட்டம் மாட வீதிகள் மற்றும் ரத வீதிகள் சுற்றி கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு கோயில் கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பாலாஜி பட்டர் கொடி பட்டம் ஏற்றினார். அப்போது அங்கு திரண்டு இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிந்தா, கோபால கோஷத்துடன் ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசித்தனர்.

விழாவில் அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் கோயில் பட்டார்கள் பங்கேற்றனர். தினமும் காலையில் ஆண்டாள், ரெங்க மன்னார் மண்டபம் எழுந்தருளலும், இரவு வீதி புறப்பாடும் நடக்கிறது. கோயில் ஆடிப்பூர கொட்டகையில் மதியம் ஒரு மணி முதல் இரவு 10:00 மணி வரை பல்வேறு ஆன்மீக சொற்பொழிவுகள், இசைக் கச்சேரிகள் நடக்கிறது. 5ஆம் திருநாளான ஜூலை 28 காலை 10 மணிக்கு பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு 10 மணிக்கு 5 வருட சேவையும், ஏழாம் திருநாளான ஜூலை 30 அன்று இரவு 7 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் சயன சேவையும், ஒன்பதாம் திருநாளான ஆகஸ்ட் 1 அன்று காலை 9:05 மணிக்கு திருத்தேரோட்டமும், பனிரெண்டாம் திருநாளான ஆகஸ்ட் 4 அன்று மாலை 6 மணிக்கு புஷ்ப யாகமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar