Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் மாவட்டத்தில் 1,226 ... திருவண்ணாமலையில் விநாயகர் கொலு திருவண்ணாமலையில் விநாயகர் கொலு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வி.குரும்பபட்டி நாகம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
வி.குரும்பபட்டி நாகம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

03 செப்
2022
07:09

கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே வி.குரும்பபட்டி நாகம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா மாவட்ட கவுன்சிலர் விஜயன் தலைமையில் நடந்தது.

விழாவையொட்டி முன்னதாக கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் மாவட்ட கவுன்சிலர் விஜயன் ஏற்பாட்டில் நடந்தது. ஆகஸ்ட் 31 முளைப்பாரி, தீர்த்தம் கன்னியாபுரத்திலிருந்து மேளதாளம் முழங்க வான வேடிக்கையுடன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின் மங்கல இசை, விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், புண்யாக வாசனம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி பூஜை, வாஸ்து சாந்தி, வாஸ்து பலி, காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், சக்தி கலச பூஜை, உள்ளிட்ட நான்கு கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது. நேற்று தீர்த்த குடங்கள் யாக சாலை, கோவிலை சுற்றி வந்து கோவிலில் உச்சியில் உள்ள கும்பத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கும்பல்களில் தீர்த்தம் ஊற்றி கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், நத்தம் பேரூராட்சி தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்ஷா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன், மோகன், ரத்தினகுமார், பழனிச்சாமி, நகரச் செயலாளர் ராஜ்மோகன், சாணார்பட்டி ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள் சுந்தரம், துணைத் தலைவர் ராமதாஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்ணன், தமிழரசி கார்த்திகைசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இதைப்போலவே சாணார்பட்டி ஒன்றியம் அஞ்சுகுழிபட்டியில் ஊராட்சி சோழகுளத்துப்பட்டி ஆண்டிச்சாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. மூன்று கால பூஜை உடன் கும்பங்களின் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar