Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சப்தவிடங்க தலங்கள்! சுபநிகழ்ச்சி நடந்து முடிந்தபிறகு, ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருநங்கை திருவிழா காண்போமா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2012
03:08

பாரதப்போரின் போது, தர்மம் நிலைக்க தனது உயிரைவிட்டவன் அரவான். போர் களத்திற்கு செல்லும் முன், தடையின்றி வெற்றி பெற காளிக்கு களப்பலி கொடுப்பது அக்கால  அரசர்களின் வழக்கம். பாண்டவர்கள் போரில் வெல்ல வேண்டுமானால்,  சாமுத்திரிகாலட்சணம் கொண்ட ஒருவனை களபலி கொடுக்க வேண்டும், அவன் தானே மனமுவந்து உயிரைத் தருபவனாக இருக்க வேண்டும், என கண்ணனிடம் ஜோதிட கலைஞன் சகாதேவன் கூறினான். சாமுத்திரிகா லட்சணம் கொண்டவர்கள் பாண்டவர்களில் இருவர் தான் இருந்தனர். ஒருவன் அர்ச்சுனன். அவனைக் களப்பலி இட முடியாது. காரணம் அவன் தான் போரின் மையமாக இருப்பவன். அடுத்து அரவான். அவன் நாக கன்னிகைக்கும் அர்ச்சுனனுக்கும் பிறந்தவன். அரவான் முழு மனதுடன் களப்பலிக்குச் சம்மதித்தான். ஆனால், இருநிபந்தனைகள் விதித்தான். கண்ணா! நான் திருமணமாகாதவன். ஒரு அழகிய பெண்ணை மணமுடித்து இன்றிரவு அவளுடன் வாழ வேண்டும். என் தலை கொய்யப்பட்ட பிறகும், பாரதப்போர் முடியும் வரை என் கண்களால் காண வேண்டும், என்றான். ஒரு நாள் வாழ எந்த பெண் சம்மதிப்பாள். எனவே ஆண்மகனான கண்ணனே, அழகிய பெண்ணாக மாறி, அரவானை மணந்து ஓர் இரவு வாழ்ந்தார். மறுநாள் அரவான் களப்பலியானான். இந்த புராண நிகழ்ச்சியைத் தான், விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் 18 நாட்கள் விழாவாக நடத்துவர். கடைசி நாளன்று அரவான் களப்பலி நடக்கும். இக்கோயிலில் பரிவார தெய்வங்கள் இல்லை. கருவறையில் ஒரு ஊஞ்சலில் அரவான் தலைமட்டும் உள்ளது. அதற்கு தினம் இருகால பூஜை செய்கின்றனர். சித்ராபவுர்ணமிக்கு முதல் நாள் இரவு, திருநங்கைகள் தங்களை மணமகளாக அலங்கரிப்பர். அரவான் சார்பில், பூஜாரி அனைவருக்கும் தாலி கட்டுவார். இரவு முழுவதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும். மறுநாள் அரவான் பலியானதும் எல்லோரும் தங்களை பெண் கண்ணனாக பாவித்து, தாலியைக் கழற்றிவிட்டு அழுவர். இவ்வாண்டு மே 1ல் தாலி கட்டும் நிகழ்ச்சியும், 2ல் அகற்றும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar