Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை : சுப்பிரமணியர் திருவீதி உலா சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பண்டாரங்களின் சிறப்பு விளக்கும் செப்பேடு
எழுத்தின் அளவு:
பழநி பண்டாரங்களின் சிறப்பு விளக்கும் செப்பேடு

பதிவு செய்த நாள்

13 அக்
2022
03:10

பழநி: பழநியில் பதினாறாம் நூற்றாண்டு சேர்ந்த செப்பேட்டை ஆய்வு செய்ததில் பண்டாரங்களில் சிறப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

பழநியில் செப்பேட்டை சத்தியன் பாதுகாத்து வைத்திருந்தார். பதினாறாம் நூற்றாண்டு சேர்ந்த இச்செப்பேட்டில் எழுதப்பட்ட விவரங்கள் அறிய தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆய்வு செய்தார். செப்பேடு குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவிக்கையில், "விஜயநகர அரசர் வெங்கடநாயக்கர் ஆட்சி காலத்தில் இச்செப்பேடு எழுதப்பட்டது தெரிய வந்தது. இதில் கலியுக சகாப்தாண்டு தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதும், சாலி மூல மார்க்கண்டேய கோத்திரத்தை சேர்ந்த பண்டாரங்களால் எழுதப்பட்டதும் தெரியவந்தது. செப்பேடு 1597 ஆம் ஆண்டு ஜன., 26க்கு நிகரான நாட்களில் எழுதப்பட்டது கண்டறியப்பட்டது.

28 செ.மீ., உயரமும் 17 செ.மீ., அகலமும் உள்ள செப்பேட்டில் முருகன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முருகன் வலது கையில் அருள் தருவது போலும், இடக்கை முத்திரையோடும் உள்ளது. முருகனின் வலது புறம் வேல் உள்ளது போல் வரையப்பட்டுள்ளது. பாம்பை மிதித்த மயில் வரையப்பட்டுள்ளது. மேலும் பழநி பகுதியில் கிடைக்கும் செப்பேடுகளில் உள்ளது போல் "வைய நீடுக" என செப்பேடு துவங்கியுள்ளது. முருகனின் சிறப்புகள் குறித்து மூன்று பாடல்கள் உள்ளது. விஜயநகர பேரரசர்களான மல்லிகார்ஜுன ராயர் முதல் வெங்கட ராயர் வரை குறிப்பிடப்பட்டுள்ளது. சாலி மூல மார்க்கண்டேய கோத்திர பண்டாரங்களில் சிறப்புகளான சொல் இரண்டு உரையாதவர்கள், 56 தேசத்திலும் சமய செங்கோல் புரிந்து வாழ்பவர்கள், ஹோம குண்டம் உருவாக்கியவர்கள், கரிகால சோழனின் பிரியத்திற்கு உரியவர்கள், சோழப்பேரரசின் வலக்கை பிரிவை சேர்ந்தவர்கள் என புகழப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு சண்முக நதியில் திருப்மஞ்சனம், திருமாலை, வில்வ அர்ச்சனை, கட்டளைக்கு ஒரு பணமும், கல்யாணத்திற்கு இரண்டு பணமும், காதுகுத்திற்கு ஒரு பணமும் மற்றும் பாக்கு, வெற்றிலை, படியரிசியும் 56 தேச பண்டாரங்களும் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது." என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar