Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கார்த்திகை வழிபாடு புரட்டாசி சனி: தங்க கவச அலங்காரத்தில் வெங்கடேச பெருமாள் அருள்பாலிப்பு புரட்டாசி சனி: தங்க கவச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூரிய,சந்திர கிரகணம் காரணமாக திருமலை கோயில் நடை அடைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2022
07:10

திருப்பதி: வரும் அக்டோபர் 25 ம் தேதி சூரிய கிரகணமும் மற்றும் நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகணமும் நிகழ இருப்பதால் அந்த நாட்களில் திருமலை திருப்பதி கோயில் நடை 12 மணி நேரம் அடைக்கப்பட்டிருக்கும். அக்டோபர் 25 ஆம் தேதி மாலை 5:11 மணி முதல் 6:27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும்,அன்றைய தினம்  காலை 8:11 மணி முதல் இரவு 7:30 மணி கதவு மூடப்பட்டிருக்கும் அதன் பின் அதற்கான சுத்தி  மேற்கொண்ட பிறகு மீண்டும் திறக்கப்படும்.

இதேபோல், நவம்பர் 8-ஆம் தேதி மதியம் 2:39 மணி முதல் மாலை 6:19 மணி வரை சந்திர கிரகணம் நிகழும் , கிரகண நாளில், கோயில் கதவுகள் காலை 8:40 மணிக்கு மூடப்பட்டு இரவு 7:20 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். இந்த இரண்டு நாட்களிலும் விஐபி பிரேக் தரிசனம், கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, பிரம்மோத்ஸவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கார சேவைகள் போன்ற ஆர்ஜித சேவைகளை கோயில் நிர்வாகம்  ரத்து செய்துள்ளது. மூத்த குடிமக்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும் கைக்குழந்தைகளுடன் உள்ள பெற்றோர்கள், என்ஆர்ஐக்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளிட்ட சலுகை பெற்றவர்களின் தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு நாட்களிலும் வைகுண்ட வாசல்  வழியாக கோவில் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு சர்வ தரிசன யாத்ரீகர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.கிரகண  நாட்களில், சமையல் செய்ய கூடாது என்பதால் அன்னபிரசாத கூடமும் மேற்குறிப்பிட்ட நேரம்  மூடப்பட்டிருக்கும். அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 8 ஆகிய இரு கிரகண நாட்களில் இந்த விஷயங்களைக் குறித்துக் கொண்டு, திருமலைக்கு தங்கள் யாத்திரையைத் திட்டமிடுமாறு பக்தர்களுக்கு வேண்டுகோள்  விடப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar