Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயில்களில் ... நத்தம் மாரியம்மன் கோவிலில் தீபாவளி வழிபாடு நத்தம் மாரியம்மன் கோவிலில் தீபாவளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி கோவிலில் பக்தர்கள் கூட்டம்: காத்திருந்து வழிபாடு
எழுத்தின் அளவு:
அவிநாசி கோவிலில் பக்தர்கள் கூட்டம்: காத்திருந்து வழிபாடு

பதிவு செய்த நாள்

25 அக்
2022
09:10

அவிநாசி: தீபாவளி திருநாளில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் திரண்டர்; சுற்றுலா தளம் போல், கோவில் காட்சியளித்தது.

புத்தாடை அணிந்து, விதம், விதமாய் உணவு சமைத்து, வண்ணமயமாய் பட்டாசு வெடித்து தீபாவாளியை கொண்டாடினாலும், சில மணித்துளிகள் இறைவன் திருவடியில் நேரம் கழித்தால் மட்டுமே விழா கொண்டாடுவதன் மனநிறைவு கிடைக்கும். அந்த வகையில் தீபாவளி திருநாளான நேற்று, காசியில் பாதி அவிநாசி எனப்புகழப்படும். அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். புத்தாடை அணிந்து, குடும்பம், குடும்பமாய் கோவிலுக்கு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, இறைவனை தரிசித்து சென்றனர். கோவிலின் வெளியிலும், உட்புறமும் விளக்கேற்றி, தங்களின் வேண்டுதலை... நிறைவேற்றினர். சிறு குழந்தைகள் முதல், இளைஞர்கள், இளம் பெண்கள், பெரியவர்கள், முதியவர்கள் என, ஆன்மிக நம்பிக்கையில் கட்டுண்ட பலரும், இறைவனின் திருவடியில் மனம் லயிக்க பிரார்த்தனை செய்தனர்.


வட மாநிலத்தவர் உற்சாகம்!

அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில், ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் நிலையில், பலர், தங்கள் சொந்த ஊர் செல்லவில்லை. இங்கேயே தீபாவளி கொண்டாடினர். வட மாநி பெண் தொழிலாளர்கள் பலர், தமிழ் கலாசாரப்படி புடவையுணிந்து கோவிலுக்கு வந்தனர். அவர்கள் மட்டுமின்றி, கோவிலுக்கு வந்த உள்ளூர்வாசிகள் உட்பட பலரும், பழமை வாய்ந்த கோவிலில் ஆங்காங்கே நின்று, செல்பி எடுத்து மகிழ்ந்தனர். வெளியூரைச் சேர்ந்த பக்தர்களும், அதிகளவில் வந்து சென்றனர். சுற்றுலா தளம் போன்று, கோவில் வளாகம் காட்சியளித்தது. பக்தர்கள் வருகையால், கோவில் முகப்பில் கார்களும், டூவீலர்களும் நிரம்பியிருந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் நகரத்தார் மக்கள் குலதெய்வ வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை அஷ்டமியை முன்னிட்டுகால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar